மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகரில் கட்டப்படாத வீட்டிற்கு குடியிருப்பதாக பட்டா வழங்கிய வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம் பெருங்குடிவிமான நிலைய சாலையில் உள்ள அம்பேத்கர் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள காலிமனையில் தனியார் ஆக்கிரமித்து கட்டம் கட்டி வருகின்றனர்.
மேலும் கட்டப்படாத வீட்டிற்கு கட்டிய வீடு என பட்டா வழங்கிய வருவாய்த்துறைய கண்டித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.
ஆனால் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிப்பு இடத்தில் போலி பட்டா வைத்து வீடு கட்டிவிடுகின்றனர். இதனை கண்டித்து அம்பத்கர் நகர் பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாஜக சார்பில் ஆர்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த பெருங்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வு செய்தனர். மேலும் பொருங்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் இடத்தின் தற்போதய நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.
அம்பேத்கர் நகர் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக சார்பில் மாவட்ட பட்டியல் அணி மலைச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தங்கபாண்டி, காளிமுத்து, மற்றும் 30 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.