இந்த நிலையிலும் வாக்குபதிவு செய்த நடிகர் விஜய்…!! கண்கலங்கிய ரசிகர்கள்..!!
இன்று நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரபரப்பாக நடந்து வருகிறது.., கடந்த ஒரு மாதமாக இன்றைய நாளுக்காக அனைத்து கட்சியினரும் தங்களின் தீவிர பிரச்சாரங்களை செய்து வந்தனர்.., இன்று வாக்கு பதிவு தொடங்கியதில் அனைத்து பிரபலங்களும் தங்களது வாக்கினை பதிவிட்டு வருகின்றனர்.
விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாசா இருந்த நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடி மையத்தில் இன்று காலை 6.40 மணிக்கு வந்து காலை 7 மணிக்கு முதல் ஆளாக தன் வாக்கை பதிவு செய்தார்..
GOAT படத்தின் இறுதி கட்ட பட பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர் விஜய் இன்று வாக்களிக்க வருவாரா என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்தது அதற்கு காரணம் கடந்த தேர்தலில் அவர் காலை 8 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து சைக்கிளில் சென்று வாக்கு சாவடி மையத்தில் வாக்குபதிவு செய்தார்..
ஆனால் தற்போது நடிகர் விஜய் GOAT படத்தின் இறுதி கட்ட பிடிப்பிற்காக ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் இந்த முறை அவர் வாக்களிக்க வருவாரா என்ற கேள்வி எழுந்தநிலையில்., சினிமாவில் தன் ஈடுபாடு எந்த அளவிற்கு இருக்குமோ அதே அளவிற்கு ஜனநாயக கடமையும் முக்கியம் என எண்ணி கேட்டவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துபாயில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து.., நீலாங்கரை வாக்குசாவடி மையத்தில் ஏழ்மையாக வாக்களிக்க வந்தார்..
கடந்த முறை சைக்கிள் வந்து வாக்குபதிவு செய்த நடிகர் விஜய்.., இந்த GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்ற அவருக்கு கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.., இந்த நிலையில் கூட வந்து வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றியது ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் நடிகர் ரஜினிகாந்த் காலை 8மணி அளவில் தனது வாக்கினை மனைவி மற்றும் மக்களுடன் வந்து வாக்கு பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வாக்குரிமை உள்ள அனைவருமே இன்று வாக்கு பதிவு செய்ய வேண்டியது உங்கள் கடமை என கூறினார்.
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் தனது வாக்கினை தனியாக வந்து வாக்கு பதிவு செய்தார்..
அதேபோல் சென்னை டி.டி.கே சாலையில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ் காலை 9மணி அளவில் தனது வாக்கினை பதிவு செய்தார் .