மருத்துவர் சுப்பையா சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி..!
டாக்டர் சுப்பையா சண்முகம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராகவும், சென்னை அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) முன்னாள் தேசியத் தலைவராகவும் இருந்தார். சில மாதங்களுக்கு முன், அவரது வீட்டின் அருகே வசிக்கும் பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு முன் டாக்டர் சுப்பையா சண்முகம் அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்து அறுவை சிகிச்சை அறை அருகே உள்ள செவிலியர்கள் உடை மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு அறுவை சிகிச்சையின் போது அவருக்கு உதவிய செவிலியரை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட செவிலியரால் இது பற்றி எதுவும் கூற முடியவில்லை. நடந்த சம்பவத்தை சக செவிலியர்களிடம் கூறி அழுதுள்ளார். அப்போது டாக்டர் மீது செவிலியர்கள் புகார் அளிக்க வேண்டும் என்றால், தகுந்த ஆதாரம் தேவை. இதனால் ஆதாரம் சேகரிக்கும் வகையில் செவிலியர்கள் யாருக்கும் தெரியாமல் ஆடை மாற்றும் அறையில் செல்போன் கேமராவை வைத்துள்ளனர்.
அப்போது வழக்கம் போல் டாக்டர் சுப்பையா சண்முகம் மீண்டும் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றார். ஆனால் நர்ஸ் சாமர்த்தியமாக அவனிடமிருந்து தப்பித்து வெளியே வந்தாள். பின்னர் பாதிக்கப்பட்ட செவிலியர்கள், சம்பவம் குறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆயிஷாவிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தனர்.
புகாரின்படி, புற்றுநோய் துறைத் தலைவர் சுப்பையா சண்முகத் மீது மருத்துவமனை விசாகா குழு விசாரணைக்கு கண்காணிப்பாளர் டாக்டர் ஆயிஷா உத்தரவிட்டார். அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்த செவிலியர்களிடமும், டாக்டர் சுப்பையா சண்முகத்திடமும் மருத்துவமனை விசாகா கமிட்டி 3 முறைக்கு மேல் விசாரணை நடத்தி வாக்குமூலம் அளித்தார்..
அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி :
அதனை தொடர்ந்து இன்று சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி மருத்துவமனையில் மருத்துவர் சுப்பையா விவகாரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவ துறையின் தலைவர் மருத்துவர் சுப்பையா சண்முகம். இவர் மீது ஏற்கனவே பாலியல் புகார் வந்திருக்கிறது.
அந்த வகையில் இது தொடர்பான விசாரணையானது விசாகா கமிட்டியின் மூலம் நடைபெற்று வருகிறது. விசாகா கமிட்டியின் விசாரணையின் தீர்ப்பு என்பது ஒரு வார காலத்தில் வரவுள்ளது.
இந்த நிலையில், அறுவை சிகிச்சை அரங்கிற்குள் மருத்துவர் சுப்பையா சண்முகம் உடன் பணிபுரிந்த செவிலியரோடு வரம்பு மீறிய செயல் இணையதளங்களிலும், ஊடகங்களிலும் பரவி வருகிறது. இந்நிலையில் விசாகா கமிட்டியின் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய புற்றுநோய் மருத்துவமனைக்கு அவரை இடமாற்றம் செய்து விட்டோம்.
ஒரு வாரத்திற்கு பின் விசாகா கமிட்டியின் தீர்ப்பு வந்தவுடன் சட்டபூர்வமான மற்றும் துறை ரீதியான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும் என கூறினார்.. இதற்கு முன்பு அவர் குடியிருப்பில் ஒரு பெண் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து விவகாரமும் அவருடைய குவாலிட்டியை வெளிப்படுத்துகிறது. எனவே விசாகா கமிட்டி தீர்ப்பு வந்தவுடன் அவர்மீது சட்டபூர்வமாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.. என உறுதி அளித்தார்..
– லோகேஸ்வரி.வெ