ஆவின் பால் விலை உயர்வு குறித்து விளக்கம் கொடுத்த ஆவின் நிறுவனம்..!
ஆவின் பாலில் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரித்து இருப்பதாக வெளியான செய்தி குறித்து ஆவின் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலமாக சென்னை முழுவதும் நாள் ஒன்றுக்கு 15லட்சம் லிட்டர் பால் பொது மக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்ற பச்சை நிற பால் பொது மக்களுக்கு லிட்டருக்கு 44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் வணிக நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படும் பால் 5 லிட்டர் 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது எனவே மக்களுக்கு அது 42 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனதிற்கு 220 ரூபாய் ஆக மாற்றப்பட்டுள்ளது. அதாவது 44 ரூபாய்க்கு வணிக விற்பனையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பால் விலை உயர்ந்து விட்டது என நினைத்து பயப்பட வேண்டாம்.., மக்களுக்கு அதே விலையில் விற்பனை செய்யப்படும், வணிக காரர்களுக்கு மட்டும் தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஊடகங்கள் சொல்லும் தவறான தகவலை நம்ப வேண்டாம் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post