இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்குக் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், எங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததே இந்த முடிவுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களுக்கு பொதுத் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கிய நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் குக்கர் நிண்ண ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதாக குறிபிட்ட டிடிவி தினகரன்,.. நாடாளுமன்ற தேர்தல் ஓராண்டில் வரவுள்ள நிலையில், தற்போது வேறு சின்னத்தில் போட்டியிட்டால் மக்களிடையே குழப்பம் ஏற்படும் என்றும், வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்துடன் தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்