சினிமாவில் இருந்து விலகும் அமீர்கான்..!! என்ன காரணம் தெரியுமா..?
ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அமீர்கான். வித்தியாசமான கதைகள் நடிப்பது மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லால் சிங் சத்தா திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக இவர் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, லால்சிங் சத்தா படத்துக்கு முன்பே நான் திரைத்துறையிலிருந்து விலக முடிவு செய்து விட்டேன். அதாவது என்னுடைய 18 வயது முதல் இன்று வரை என்னுடைய முழு இளமைப் பருவம் உள்ளத்தை அனைத்தையும் சினிமாவில் கவனம் செலுத்துவதிலேயே கடந்துவிட்டேன்.
இதனால் என்னால் குடும்பம் குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிட முடியவில்லை என்னுடைய முன்னாள் மனைவி நினைவாக இருக்கட்டும் கிரண் ராவாக இருக்கட்டும் அவர்களுக்காக நான் நேரம் செலவிட்டதே கிடையாது வாழ்வின் பெரும் பகுதியை சினிமாவுக்கு அர்ப்பணித்து விட்டோம்.
குடும்பத்தை கவனிக்கவில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன் இதனால் பெரும் குற்ற உணர்வு என்னை ஆட்கொண்டு விட்டது. கடந்த 35 ஆண்டுகளாக நான் நடித்து விட்டேன் இனி நான் என் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டும் நல்ல வேலையாக இதை 57 வயதிலேயே உணர்ந்துவிட்டேன்.
இந்த முடிவை எடுக்கும் போது என்னுடைய குழந்தைகள் திரையுலகிலிருந்து விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அதனால் இந்த 10 வருடங்கள் என்னுடைய சினிமா வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளாக இருக்கும் அதற்குள் ஆறு படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். இந்த காலகட்டத்தில் சிறந்த இயக்குனர்கள் எழுத்தாளர்கள் இசையமைப்பாளர்களுடன் பயணிக்க விரும்புகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.