நண்பனை பார்க்க சென்ற இளைஞர்… வழியில் மின்சாரம் தாக்கிய பரிதாபம்..!
கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் தேசாய் சந்து எனும் பகுதியை சேர்ந்த ஞானபிரகாசம் என்பவரின் மகன் விக்னேஸ்வரன்(27). இவர் ஐ.டி.ஐ முடித்துவிட்டு தந்தையின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 13-ஆம் தேதி இரவு விக்னேஸ்வரன் தனது நண்பனை பார்க்க தனது இரு சக்கர வாகனத்தில் மூலம் சென்றுள்ளார். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. அங்காங்கே மின்கம்பி அருந்த நிலையில் இருந்தது.
இதைத்தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த விக்னேஸ்வரன் மீது அறுந்த நிலையில் தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி எதிர்பாராதவிதமாக உரசியது.
இதில் அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே விக்னேஸ்வரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்த தகவறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்