சென்னை சௌகார்பேட்டை தனியார் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து..!!
சென்னை மின்ட் அடுத்துள்ள சௌகார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் ஒன்றில். இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த எப்படி தீடிரென ஏற்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். தனியார் வணிக வளாகம் அருகேயுள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பிடித்துள்ளது.., இந்த தீயானது அருகேயுள்ள துணிகடைகளுக்கும் பரவியுள்ளது.
சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.. தகவலின் பெயரின் 6 தீயணைப்பு வண்டிகள் அங்கு வரவழைக்கப்பட்டன. நீண்ட போராட்டத்திற்கு பிறகே இந்த தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில், வணிக வளாகத்தில் , 10 துணிக்கடைகள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில் பல லட்சம் சரக்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்து பற்றி மேலும் விசாரணை நடைபெற்று வருவதால்.., அந்த பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியா அவலம் ஏற்பட்டுள்ளது.