மின்தடை இல்லா மாநிலம்.! தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிக்கை..!
மின் தடை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் மின் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டில் 32,595 மெகாவாட்டாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மின் நிறுவுதிறன் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் 36,671 மெகாவாட் என அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின். மின்கட்டமைப்பு. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 454.32 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும், 20.830 மெகாவாட் உச்ச மின் தேவையையும் எவ்விதத் தடங்கலுமின்றி வழங்கி திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது
2021-22 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் திறமையான செயல்பாடு, வட்டி விகிதம் குறைப்பு, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் 2.745 கோடியும் சேமிப்பும் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மூன்றாண்டுகளாக மின் தடையே இல்லை எனும் வரலாறு படைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சீர்திருத்தங்களால் புதியதாக துணை மின் நிலையங்களை நிறுவி, மின் மாற்றிகளை அமைத்து, மின்விநியோக அமைப்புகள் சீராகச் செயல்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் திமுக அரசைப் பாராட்டுவதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..