கோடை வெயிலில் ஒரு மழை..!! உற்சாகத்தில் மக்கள்..!! அடுத்த நிலவரம்..?
தமிழ்நாட்டில் கோடை வெயில் நம்மை வாட்டி வதைத்து வந்த நிலையில்.., தற்போது கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் லேசான மழை பெய்து வந்துள்ளது.. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சுமார் 3 மணி நேரம் வரை மழை பெய்து வந்துள்ளது..
கடந்த சில நாட்களாக கோடை வெயில் சென்னை மக்களை சுட்டெரித்து வந்தது.., மே 3ம் தேதி அன்று கத்திரி வெயிலும் தொடங்கியது.., அதனை தொடர்ந்து வழக்கத்தை விட கூடுதல் வெப்பமும் வெப்பக்காற்றும் வீச தொடங்கியது..
அதாவது வழக்கத்தை விட 100 டிகிரி பேரான் ஹீட் வெப்பமும் நண்பகல் வேளையில் அதிக வெப்ப காற்றும் வீச தொடங்கியது.., இந்நிலையில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது.
தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், அடையார், எழும்பூர், கெல்லிஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்தது.
மேலும் சென்னையின் புறநகர் பகுதியிலும் வடசென்னை பகுதியிலும் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் இன்று பெய்த இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மிகவும் சந்தோசம் அடைந்துள்ளனர்..
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது.., வழக்கத்தை விட இன்று வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன் ஹீட் செல்சியல் அளவு குறைந்து இருப்பதாகவும்.., மேலும் இன்னும் 24 மணி நேரத்திற்கு சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.