ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமியுடன் உடல் ரீதியாக தொடர்பு கொண்டு திருமண ஆசை காட்டி தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் 23 வயது இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கி சிவகாசியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உடலுறவு செய்து ஏமாற்றி தற்கொலை செய்து கொள்ள தூண்டிய குற்றத்திற்காக சிவகாசி நகர் காவல் நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் விக்னேஷ் என்பவரை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.
Discussion about this post