தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளில் பாமாயில் விற்பனையை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளில் பாமாயில் விற்பனையை ரத்து செய்து, தமிழ்நாட்டின் தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்னை விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.