சுற்றுலா பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்..!
அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பிரதான அருவியான “மணிமுத்தாறு அருவியில்” நீர்வரத்து குறைந்து இருப்பதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் கடந்த மாதம் 29ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
தற்போது பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 2ம் தேதி காலை முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து இருப்பதால் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..