பிரபல நகைக் கடையில் தீ விபத்து..! பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம்..!
பிரபல நகைக் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து. உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்ப்பு….
விருதுநகர் மதுரை சாலையில் பிரபல ( ஸ்ரீகுமரன் தங்கமாளிகை) நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைக் கடையில் மாடியில் ஜெனரேட்டர் அறை மற்றும் அலுவலக அறை உள்ளது.இன்று பிற்பகலில் 1 மணியளவில் திடீரென தீப்பிடித்து அதிகமாக புகை வந்துள்ளது.
இதனைக் கண்ட அலுவலக அறையில் இருந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினர். கீழ் தளத்தில் பணியாற்றிய 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடையை விட்டு உடன் வெளியேறினர்.
தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடன் விரைந்து வந்து தீயை மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தனர். அதில் உள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்றாலும். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து விட்டதாக கடையின் உரிமயாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடை மேலாளர் பால் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே உண்மை காரணம் தெரிய வரும்.
– லோகேஸ்வரி.வெ