தண்ணீர் தொட்டியில் விழுந்த காளை மாடு…!! அரியவகை ஆந்தை மீட்பு..!!
அரிய வகை ஆந்தை :
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் சாலையில் செல்லப்பா என்பவர் வீட்டில் உள்ள மரத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று அமர்ந்து இருந்ததை கண்ட செல்லப்பா காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரத்திலிருந்த அரிய வகை ஆந்தை பத்திரமாக மீட்டு கிறிஸ்டியான் பேட்டை காப்பு காட்டில் விடப்பட்டது. மேலும் இந்த ஆந்தையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியப்புடன் கண்டனர்.
அஷ்டாதசபுஜை :
மயிலாடுதுறை மாவட்டம் அருகே கருவாழக்கரை கிராமத்தில் மகாசதா சிவபீடம் வளாகத்தில் அஷ்டாதசபுஜை மகாலட்சுமி துர்காதேவி கோயில் அமைந்துள்ளது. பதினெட்டு கைகளுடன் துர்காதேவி அருள்பாலிக்கும் இக்கோயிலில் நவராத்திரியையொட்டி சதசண்டீ ஹோமம் தொடங்கியது.
நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று இங்கு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஹோமத்தில் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பாமக மனு :
ராணிப்பேட்டை பாலாற்றின் கரையருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அந்த மனுவினைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
தண்ணீர் தொட்டியில் காளை மாடு :
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான காளை மாடு மேய்ச்சலின் போது பாழடைந்த 15 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் தொட்டியில் விழுந்து உள்ளது. காளை மாடு அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் உடனடியாக வந்து பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி காளை மாட்டை உயிருடன் மீட்டனர். மீட்டுக் கொடுத்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.