16 வயது சிறுமிக்கு போதை மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை.. தோழி செய்த சதி..!
சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். அவரை திருவள்ளூர் மாவட்டம் கொன்னஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (20) என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்தநிலையில், அந்த சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் பிரியா என்ற பெண் மூலம் சிறுமியின் நண்பர்களான சுபா, கீர்த்தி ஆகியோருடன் ஸ்ரீநாத்க்கு நட்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து தனது தோழி கீர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கீர்த்தி தன்னிடம் மாத்திரை உள்ளது அதை போடசொல்லி சிறுமியிடம் கொடுத்துள்ளார்.
அவற்றை உட்கொண்ட சிறுமி அங்கேயே மயங்கியுள்ளார். இதையறிந்து அங்கு வந்த ஸ்ரீநாத், சம்பந்தப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மயக்கம் தெளிந்த சிறுமி இதை அறிந்த அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீநாத்தை கைது விசாரித்தனர்.
இதில் முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீநாத் கொடுத்த ஆலோசனைப் படி தான் சிறுமிக்கு தலை வலி மாத்திரைக்கு பதிலாக போதை மாத்திரை கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாகி உள்ள சுபா, கீர்த்தி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றன.
-பவானி கார்த்திக்