50க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்..
திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம் பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வாணியம்பாடி ஆலங்காயம் மார்க்கத்தை நோக்கி வந்த அரசு பேருந்து, திடீர் விபத்துக்கு உள்ளானதால் பரபரப்பு.
நாற்றம் பள்ளி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டியிருந்த அரசு பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் திடீரென ஆணி போன்ற இரும்பு துகள் சக்கரத்தில் துளைத்ததால் பேருந்து நிலை தடுமாறியுள்ளது. அதை அறிந்த ஓட்டுநர், சுதாரித்துக் கொண்டு பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார்.
அப்போது பேருந்தின் முன் பக்க சக்கரம், பஞ்சர் ஆன நிலையில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.
பின் ஓட்டுனரும் நடத்துனரும் பஞ்சரான பேருந்தின் சக்கரத்தை கழற்றி மாற்று சக்கரத்தை பொருத்தி பேருந்தை இயக்கி சென்றுள்ளனர். நூலிழையில் பேருந்தில் பயணித்த 50க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனரின் சாதுர்யமான நடவடிக்கையை பயணிகள் வெகுவாக பாராட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.
















