வேலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து..! பொது மக்கள் செய்த செயல்..!!
சிப்காட் அருகே இருசக்கர வாகனம் மீது கார் வேகமாக மோதிய விபத்தில் கணவன் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டம் எம்ரால்டு நகர் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த குருசாமி லட்சுமி தம்பதியர், சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் லெதர் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். வழக்கம் போல தொழிற்சாலையில் வேலைய முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது, எம்ரால்டு நகர் பகுதியில் சாலையை கடக்கும் பொழுது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தம்பதியர்களான குருசாமி மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதில், உடம்பில் பல்வேறு இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பின் சாலையில் பயணம் செய்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலென்சிற்கும் போன் செய்து மருத்து உதவி செய்துள்ளனர். பின் விபத்து குறித்து போக்குவரத்து காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் இருவரும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேலும் வாலாஜாப்பேட்டை மருத்துவமனையில் குருசாமி மற்றும் லட்சுமி ஆகிய இருவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சை வழங்க வேண்டும், என்பதற்காக மருத்துவர்கள் வேலூர் அரசு அடுக்கும்பாறை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி அனுப்பி வைத்தனர்..
தொடர்ந்து நடைபெற்ற இந்த விபத்து சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
















