ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சாத்தூர் அருகே மேட்டமலை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மனநலம் குன்றிய சிறுமியிடம் பாலியியல் சீண்டலில் ஈடுபட்டதாக சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கனது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மணிகண்டன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

















