மணிப்பூர் கலவரம் கட்டுப்பாட்டை இழந்து வரும் நிலையில், மாநில அரசு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணிப்பூரில் மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தினரையே உருவான போராட்டம் தற்போது பெரும் கலவரமாக வெடித்துள்ளது.
மணிப்பூர் ஆணையரும் செயலாளருமான எச் ஞான் பிரகாஷ் வெளியிட்டுள்ள உத்தரவில், நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுக்கான திட்டத்தை மணிப்பூர் அரசு செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் கலவரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

















