தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக, பரவலாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடலோர பகுதிகளில் மாலை நேர காற்று இல்லாமல் கடும் உஷ்ணம் நிலவிவருகிறது.
இன்றைய நிலவரப்படி, ஈரோடு-106, கரூர் பரமத்தி, சேலம்-105, மதுரைநகரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர்-104, திருத்தணி, நாமக்கல்-103, மதுரை விமான நிலையம், சென்னை மீனம்பாக்கம், தருமபுரி- 102, கோவை-101, தஞ்சை- 100 டிகிரி வரைக்கும் வெயில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இந்தாண்டு அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.