கேரளா மற்றும் தமிழக முதல்வர்கள் கலந்து கொண்ட வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு மாநாடு கூடியிருந்த மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.
மதவாத, சாதிய சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் வைக்கம் சத்தியாகிரகம் வெளிச்சமாக இருக்க வேண்டும் என்று மாநாட்டு மேடையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும், மு.க.ஸ்டாலினும் சத்தியாக்கிரகிகளின் உருவச்சிலை அமைந்துள்ள பகுதிக்கு வந்தனர் மகாத்மா காந்தி தந்தை பெரியார் டி கே மாதவன் மன்னத்து பத்மநாபன் உள்ளிட்ட போராட்ட தலைவர்களின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்
தொடர்ந்து விழா மேடைக்கு வந்த முதலமைச்சர்களை காண வைக்கம் காயல் கரையோரத்தில் உள்ள மைதானத்தில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். இவர்களுக்கு முன்பாக வைக்கம் சத்தியாகிரகத்தின் 100 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தீபம் ஏற்றப்பட்டது
தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதவாத, சாதிய சக்திகள் மீண்டும் வலுப்பெறும் காலகட்டத்தில், பொறுப்பு அதிகம் என்றும், அவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு வைக்கம் சத்தியாகிரகம் வெளிச்சமாக இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.
வைக்கம் போராட்டம் இந்தியா முழுமைக்கும் தாக்கத்தை அன்றைய காலகட்டத்தில் ஏற்படுத்தியதாகவும், வைக்கம் கேரளத்தில் இருந்தாலும் தமிழகத்தின் மக்கள் மனதில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் இந்தியா முழுமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் சுயமரியாதை வைக்கும் மண்ணில் நிற்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறினார். அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய கேரளா முதல்வர் பினராய் விஜயன் கேரளா மற்றும் தமிழகம். எதிர்காலத்தில் ஒன்றாக இருப்போம் என்று கூறினார் இரு மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட இந்த பிரம்மாண்ட துவக்க விழாவில் தமிழக-கேரள காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.
வைக்கம் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை மலையாளத்தில் வரவேற்றது கேரள மக்களிடையே ஆராவாரத்தை ஏற்படுத்தியது.