கடந்த ஆண்டு நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். ஜெயம் ரவி-ஆர்த்திக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம், ஒரு பிரபல பாடகி என்று அப்போது, சொல்லப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு, அடிக்கடி கோவாவுக்கு செல்ல தொடங்கியுள்ளார். அதன் பின்னணியில் பாடகி ஒருவர் இருந்துள்ளார். அவர்தான் கென்னிஷா பிரான்சிஸ்.
கென்னிஷாவுடன் பழக தொடங்கியதில் இருந்து , அவர் சொல்படிதான் ஜெயம் ரவி கேட்டு நடப்பதாக சொல்லப்படுகிறது. கென்னிஸ் கூறியபடிதான் ஆர்த்தியிடம் கூட விவாதிக்காமல் விவாகரத்து அறிவிப்பை ஜெயம் ரவி வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தங்களுக்கிடையே எந்த உறவும் கிடையாது என்று ஜெயம் ரவி மறுத்தார். கென்னிஷாவும் மறுத்திருந்தார்.
பின்னர், பிரபல மியூசிக் சேனல் ஒன்றிடம் பேசிய போது பல விஷயங்களை கென்னிஷா பகிர்ந்து கொண்டார். கென்னிஷா பிரான்சிஸ் கோவா, மும்பையில் வசித்தாலும் சுத்தமான தமிழ் பொண்ணுதான் என்று தன்னை கூறிக் கொள்கிறார். நன்றாக தமிழும் பேசுவார். அதோடு, லைசென்ஸ் பெற்ற சைக்காலஜிஸ்ட்டும் கூட.
இதற்கிடையே, மனைவியிடம் இருந்து பிரிந்த ஜெயம் ரவி, தனது பெயரை ரவிமோகன் என்று மாற்றிக் கொண்டார். இந்த நிலையில், ஜெயம் ரவியும் கென்ஷாவும் புது மண தம்பதி போல ஒரே வண்ணத்திலான உடை அணிந்து திருமணத்தில் பங்கற்றது ரசிகர்களின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
பிரபல படத் தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் இல்ல திருமண விழா இன்று (மே 9) சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில்தான் இருவரும் தங்க வண்ணத்திலான உடை அணிந்து அருகருமே அமர்ந்திருந்தனர். இதனால், ரவி மோகனுக்கும் கென்னிஷாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
கடந்த வருடத்தில் ஆர்த்தி உடனான திருமண பந்தத்தில் இருந்து தான் விலகுவதாக அறிவித்திருந்தார். பிறகு விவாகரத்துக்கு நீதிமன்றத்தை நாடினார். ஆனால் , மனைவி ஆர்த்தி நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன் எனக்கு சேர்ந்து வாழ விருப்பம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று ரவி மோகன் கெனிஷா உடன் திருமண பங்க்ஷனில் கலந்து கொண்டது குறித்து ஆர்த்தி வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில் ‘எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள், நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலி சமாதான வாக்குறுதிகள் இவை அனைத்தும் காயங்களாக எங்கள் நெஞ்சில் நிற்கிறது. எனக்கு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளது. நான் ஒரு மனைவியாகவோ அல்லது குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ பேசவில்லை. தன் குழந்தைகளின் நலனை காக்க நினைக்கும் தாயாக மட்டுமே குரல் கொடுக்கிறேன். நான் இதை செய்யாமல் இருந்தால் நானும் அவர்களை கைவிட்டதாகிவிடும். இன்று உங்கள் நிலையை நீங்கள் உயர்த்திக் கொள்ளலாம். உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் உண்மையை மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.