சிறப்பாக நடக்கும் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு ஏற்பாடுகள்..!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை கவனிப்பதற்காக துபாயை சேர்ந்த பிரபல நிறுவனம் பொறுப்பேற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநாடு தள்ளிப் வைப்பதா தவெகா சார்பில் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மாநாட்டுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் செப்டம்பர் மாதம் பாதி கடந்துவிட்ட நிலையில், தற்போது அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக ,நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அறிவித்திருக்கிறார்.
இதனையடுத்து மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
தற்போது மாநாட்டுக்கான முதற்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர்.
மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் வருவதற்காக வாகனங்கள் முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகிறார்கள்.
மாவட்ட ரீதியாக புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி மாநாட்டுக்கு தொடக்க நிகழ்ச்சியாக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
மாநாட்டுக்கு இன்னும் சிறிது கால இடைவெளியே இருக்கும் நிலையில் மாநாட்டுக்கான மேடை, பந்தல் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முதல் மாநாடு என்பதால் எந்தவித சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை விஜய் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.
மாநாட்டின் ஒருங்கிணைப்பு பணிகளை செய்வதற்காக துபாயை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த நிறுவனத்துடன் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்,வரவேற்பு, அலங்காரம், விஜய்க்கு வரவேற்பு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, உணவு வழங்குவது, பார்க்கிங் பணிகள் கவனிப்பது என மாநாட்டின் ஒருங்கிணைப்பு பணிகளை அந்த நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.
மாநாட்டிற்கு அவசர சிகிச்சை வழங்குவதற்காக நூற்றுக்கும் மேற்ப்பட்ட மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் 7000க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள், தவெக தொண்டர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மாநாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளனர்.
அது மட்டும் அல்லாமல் மாநாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில் தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று தமிழக வெற்றிக் கழக கட்சியினர் தரப்பில் தெரிவித்தனர்.