கட்டு கட்டாக சிக்கிய போதைபொருள்..!! காவல்துறையினர் அதிரடி..!!
சாத்தூர் அருகே 70 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பறிமுதல் 4 நபர்களை கைது செய்து ஏழாயிரம் பண்ணை போலீசார் நடவடிக்கை…
போதைபொருள் புழக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது., போதைபொருள் புழக்கம் மட்டுமின்றி அதனை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை பிடிபதற்காகவும் அரசு முயற்சித்து வருகிறது.. அதற்காக ஆங்காங்கே காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை போலீசார் நேற்று இரவு சங்கரன்கோவில் சாலையில் சிப்பிபாறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் அதிக அளவிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து அந்த சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அவ்வழியே வந்த காரினை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் சுமார் 79 கிலோ அளவில் உள்ள கணேஷ் புகையிலை 350 பாக்கெட்டுகள் மற்றும் ஐந்து கிலோ மதிப்பிலான கூல் லிப்ஸ் எனப்படும் பாக்கெட்டுகள் 47 மற்றும் 8 கிலோ அளவிலான குட்கா பாக்கெட்டுகளும் இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து காரில் வந்தவர்களை கைது செய்து காருடன் ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு நடத்திய விசாரணையில் புகையிலை மற்றும் குட்கா கடத்திய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெம்பக்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கோபால் என்பவரது மகன் ரமேஷ்(37), சாத்தூர் -அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகன் தினேஷ்குமார் (22), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் தினேஷ்குமார் (27)நாகராஜன் என்பவரது மகன் சின்னத்தம்பி (40) ஆகிய நான்கு பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து நான்கு செல்ஃபோன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த ஏழாயிரம்பண்ணை போலீசார் இவர்களுக்கு எங்கிருந்து புகையிலை கிடைத்தது எங்கெங்கு விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.