ஆவின் பால் விலை உயர்வு..! விவாசாயிகளுக்காக வரவுள்ள திட்டம்..! அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி..!
சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது
ஆவின் நிலையான வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் 10 ஆயிரம் பால் கூட்டுறவு சங்கங்கள் கணக்குகள் கணினி மயமாக்கப்படும் பணி தொடங்கிஉள்ளது. மொத்த செயல்பாடும் மின் ஆளுமைக்கு உட்படுத்தடும் முயற்சி.
அதற்காக, மாவட்ட ஒன்றியத்தில் DR அலுவலகத்தில் தனி மின்னஞ்சல் துவங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் நிகர லாபம், கொள்ளளவு சார்ந்து நான்கு பிரிவுகளாக பிரிக்க முடிவு.குறைவான பால் உற்பத்தி கொடுக்கும் சங்கங்களுக்கு தனி கவனம் கொடுத்து ஊக்கம் அளிக்க முடிவு.
பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு பல்வேறு நிலைகளில் துறை சார்ந்த தீவிர பயிற்சி தர முடிவு. சங்க உறுப்பினர்களுக்கும் சலுகைகள், கடன், இன்சூரன்ஸ், முழு பயணம் அரைத்து உறுப்பினர்கள் கிடைக்கும் வகையில் அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று ரூபாய் ஊக்கத்தொகை விவசாயப் பெருமக்களுக்கு அளித்தார்கள் அது மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது இப்போது கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 3 கூட்டச் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகத்தின் வாயிலாக நேரடி விவசாய பெருமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த முயற்சி மேற்கொள்ள பட்டிருக்கிறது.
கூட்டுறவு சங்கங்கள் இல்லாத இடங்களில் புதிய கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். கடந்த ஆண்டு 300 இடங்களில் தொடங்கப்பட்டது இந்த ஆண்டு இன்னும் பல இடங்கள் தொடங்கப்படும் அதன் மூலமாக துறை சார்ந்த பலன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
நேற்று 36,50,000 லிட்டர் நமது ஒன்றியங்கள் பால் கொள்முதல் செய்யப்பட்டது. உள்ளூரிலே விற்பனை செய்வது இன்னும் கணிசமான தொகையை தருகிறது. பால் கையாளும் திறன் அதிகரித்து இருக்கிறது. தனியார் பால் நிறுவனம் என்ன அறிவித்தாலும், ஆவினின் செயல்பாடு அதிகமாகவே இருக்கிறது.
ஆவின் பால், உற்பத்தி, கொள்முதல் அதிகமாகி உள்ளது. பால் வரத்து அதிகமானால் ஏற்றுமதி செய்யப்படும். ஆவின் பால் விலை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியாவில் இந்த அளவு குறைவான பால் விலை எங்கும் இல்லை. கொடுக்கவும் முடியாது.
முதல்வர் அவர்கள் நம்முடைய நுகர்வோர் எந்த சிரமத்திற்கும் ஆளாக கூடாது என்பது தான் ஒரு திட்டமாக வைத்திருக்கிறார். விலையேற்றம் குறித்து நுகர்வோரி்டம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். முதல்வரிடம் ஆலோசித்து வருகின்ற காலகட்டங்களில் செயல்படுத்தலாம் இப்போது அந்த எண்ணம் இல்லை மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் பேரிடர் காலத்தை கையாளும் திட்டம் தீட்டப்பட்டது.
கடந்த கால கட்டங்களில் சென்னையில் நடந்த வெள்ளப்பெருக்கு அனுபவத்தின் அடிப்படையில் வருகிற காலகட்ட நெருக்கடி நிலை சமாளிக்க திட்டம் எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஐசியுல் இருந்தது யார் ஆக்ஸிஜன் கொடுக்கிறார்களோ அவர்களை காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது.
வருத்தம் என்ன என்றால் தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒன்றிய அரசு பாகுபாடு இல்லாமல் மாநிலங்களுக்கு பட்ஜெட் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை அது மட்டுமே வருத்தம் என அவர் கூறியுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ