ஏ.ஆர்.ரகுமான் இசை கச்சேரியில் சிக்கல்..!! ஆதங்கமான ரசிகர்கள்..! மன்னிப்பு கேட்ட நிறுவனம்..!!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் நேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குழுவின் சார்பாக “மறக்குமா நெஞ்சம்” என்று ஒரு இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை கச்சேரி ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதியே நடக்க இருந்தது ஆனால் மழையின் காரணமாக தள்ளி போனது.
கச்சேரி ஒத்திவைக்க பட்ட நிலையில், “மறக்குமா நெஞ்சம்” இசை கச்சேரி திட்டமிட்டபடி நேற்று, பனையூரில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் ராசிகர்கள் வந்துள்ளனர்.
இசை கச்சேரியை காண ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய், 5000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என கோல்டன், சில்வர், பிளாட்டினம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. ஆனால், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ரசிகர்கள் புக்கிங் செய்தபடி சீட்டு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இசை கச்சேரி நடைபெற்ற கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசை கட்டி நின்றுள்ளன. இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் கச்சேரியில் பங்கேற்க வந்தவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பல மணி நேரம் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளான ரசிகர்கள் கோஷமிட தொடங்கியுள்ளனர், எனவே சமூக வலைதளம் பக்கத்தில் ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை பதிவிட்டுள்ளனர்.
Grateful to Chennai and the legendary @arrahman Sir! The incredible response, the overwhelming crowd made our show a massive success. Those who couldn't attend on overcrowding, Our sincere apologies. We take full responsibility and accountable. We are with you. #MarakkumaNenjam
— ACTC Events (@actcevents) September 11, 2023
எனவே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அந்த நிறுவனம் “ட்விட்டர்” பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது. கச்சேரியை காண வந்த ரசிகர்களுக்கு இருக்கைகள் கிடைக்காமல் போனதற்கு மிக வருத்தம், அதற்கான முழு பொறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.