₹6.50 கோடி அபேஸ்..!! பாஜக பெண் நிர்வாகி ஓட்டம்..!! வெளிவந்த பகீர் தகவல்..!
ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்தவர் சண்முகவடிவு. இவர் ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சித்தாந்த பரப்புரையாளர் மற்றும் மகளிர் அணி அமைப்பாளராக செயல் ஆற்றி வருகிறார்.
இவரின் கணவர் சந்திரசேகர், இவர்கள் இருவரும் இரும்பு வியாபாரம் செய்வதை போல.., பல போலி ஆவணங்களை வைத்து 6 போலி நிறுவனங்களை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.
அந்த 6 போலி நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி கட்டி அதற்கான ரசித்துக்களையும் வைத்துள்ளனர்.
குறைந்த விலைக்கு கம்பி போன்ற ஹார்ட்வேர் பொருட்களை விற்பனை செய்து வருவதாக ஒரு விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த விளம்பரத்தை பார்த்து சென்னை, சேலம், புதுச்சேரி, கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் இருந்து பல நிறுவனங்கள் இரும்பு பொருட்களை வாங்கியுள்ளனர்.
ஒரு சில நிறுவனத்திடம் இருந்து முன்பணமும் வாங்கியுள்ளார்.
கம்பி போன்ற இரும்பு பொருட்களுக்கு உரியதொகை செலுத்தமால் இழுத்தடித்துள்ளனர்.
பணமாக எங்களிடம் இல்லை அதற்கு பதிலாக காசோலை கொடுக்கிறோம் என சண்முக வடிவு கூறியுள்ளார், அவரின் பேச்சை நம்பி தொழில் நிறுவன முதலாளிகளும் , அந்த பெண் கொடுத்த காசோலையை கொண்டு சென்று வங்கியில் கேட்டதற்கு, வங்கியில் பணம் இல்லை என திரும்பி வந்துள்ளது.
மேலும் பணம் கேட்டு யாரவது வந்தால் அவர்களை ரவுடிகளை வைத்து மிரட்டுவதை சண்முக வடிவு வாடிக்கையாக வைத்துள்ளார்..
இதனால் ஏமாற்றத்தை உணர்ந்த அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களும் ஒன்று கூடி.., ஈரோடு கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர்.
இதுவரை அனைத்து நிறுவனங்களுக்கும் சண்முக வடிவு மற்றும் சந்திரசேகர் 6.50 கோடி பணத்தை ஏமாற்றி விட்டதாகவும், அதனை . மீட்டு தர வேண்டியும் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற போலீசார் இன்று காலை சண்முக வடிவின் வீட்டிற்கு சென்று பார்த்தப் போது.., தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.
தலைமறைவாகி உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..