விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்…சாலை மறியலில் புதுச்சேரி பொதுமக்கள்…!
புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகரை சேர்ந்தவர் செந்தாமரை (87) இவர் நேற்று காலை தனது வீட்டில் கழிவறை சென்றுள்ள போது விஷவாயுத்தாக்கி மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.
இதனை அறிந்த அவரது மகள் காமாட்சி (45) செந்தாமரையை மீட்க செல்லும் போதும் அவரும் விஷவாயு தாக்கியதில் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
அலரல் சத்தத்தை கேட்ட காமாட்சியின் மகள் பாக்கியலட்சுமி சென்று பார்க்கும் பொழுது அவரும் மூச்சு திணறி மயங்கி விழுந்துள்ளார்.
இதில் செந்தாமரை மற்றும் அவரது மகள் காமாட்சி ஆகியோர் கழிவறையிலே விஷவாயு தாக்கியதில் இறந்துவிட்டனர்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி இருந்த பாக்கியலட்சுமி உடனடியாக மீட்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் அதே பகுதியைச் சேர்ந்த பக்கத்து வீட்டுச் 15 வயது சிறுமி செல்வராணி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்தனர்.
இதில் செல்வராணி உயிரிழுந்து விட்டார் பாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கழிவறையில் அடுத்தடுத்து இரண்டு பேர் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்த சாலை மறியலால் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் “கழிப்பறையில் விஷவாயு வெளியேறிய விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை” என்று வலிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்