2கே கிட்ஸால் செலிபிரிட்டி ஆகும் இன்ஸ்ட்டா இம்சைகள்..! அட்டுழியம் செய்த யுடியூபர்..! விஜபி-கள் என்றால் யார்..?
சமூக வலைத்தளத்தில் மிக மோசமான பின்புலம் கொண்டவர்களைக் கல்லூரிகளுக்குச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
சமூகத்தில் ஏதேனும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற லட்சியத்தோடு உழைப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். அப்படி இருபவர்களையே ஒரு காலத்தில் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டார்கள். ஆனால் இன்று நிலைமை மோசமாகி விட்டது என சொல்லலாம்.
யூடியூப்பில் 1000 பேர் Followers வந்தாலே அவர்கள் செலிபிரிட்டி ஆகிவிடுகிறார்கள். இவர்களை எல்லாம் அழைத்து கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் டான்ஸ் ஆடி செலிபிரிட்டி ஆகி விடுகிறார்கள்.
இதை எல்லாம் யாராவது கேள்வி கேட்டால், அவர்களை “‘பூமர் அங்கிள்” என சொல்லுகிறார்கள் இந்த 2கே கிட்ஸ். மறுபக்கம் இந்த நெட்டிஸைன்கள் மீம்ஸ் தயாரித்து சமூக வலைத்தளத்தில் அவரை ட்ரோல் செய்து லைக்ஸ் வாங்கி கொள்கிறார்கள். இதனாலயே பலரும் நமக்கு ஏன்பா வம்பு..? என ஒதுங்கி கொள்கிறார்கள்.
இப்படி தான் இங்கே ஒருத்தரும் பேமஸ் ஆகி உள்ளார். ரசிகனின் ரசிகன் மணி என்று இன்ஸ்டா Influencer ஒருவரை நேற்று ஒரு தனியார் கல்லூரிக்கு விருந்தினராக அழைத்துள்ளனர். அந்த இன்ஸ்ட்டா இம்சை அரசனும் கல்லூரிக்குப் போய் தென்னாப்பிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா முதல் மகாத்மா வரை கரைத்தது போல பேசுவார் என பார்த்தால்.
அவரது அறிவாற்றலால் மாணவிகளைக் கட்டிப் போட்டு இழுத்த அவரை, கல்லூரிக்குள் உள்ளே அழைத்துப் போவதற்குள் போதுமடாசாமி என ஆகிவிட்டது. அவ்வளவு தள்ளுமுள்ளு., அவ்வளவு நெரிசல்., அத்தனை கல்லூரி மாணவிகளும் அவரது ரசிகைகள்., என நினைத்தாலே மிகவும் வேதனையாக இருக்கிறது.
இந்த ரசிகனின் ரசிகன் என்கிற யூடியூப் சேனலில் கிட்டத்தட்ட 3 மில்லியன் Followersகள் உள்ளதால் இவரை கல்லூரிக்கு அழைத்தது மிகவும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதற்கு பலரும் மணியை பற்றி ஒரு தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதற்கு மணியும் அது நான் இல்லை என மறுத்து பேசி அவரது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அந்த இம்சை அரசன் பேசியதாவது.
“என் பொருளைப் பார்க்க இத்தனைப் பேர் அலையுறீங்களா..? என்று தெனாவட்டாக பேசி உள்ளார். பிரச்சினை இவர் மீது இல்லை. இவரைப் பின் தொடரும் அந்த 3 மில்லியன் அரவேக் காடுகள் குறித்துத்தான்.
தமிழ்நாட்டில் ஒரு செய்தி நிறுவனமே 1 மில்லியன் Followers ரீச் செய்வதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறது. அதே நல்ல மனசுடன் நாட்டுக்கு நல்ல செய்திகளை வழங்க வேண்டும் என்பதற்காகப் பல தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் தரமான சேனல்களை நடத்தி வருகிறார்கள்.
மறுபக்கம் அறிவியல், வரலாறு, ட்ராவல் என பல்வேறு தமிழில் மிகச் சிறப்பான யூடியூப் சேனல்கள் இயங்கி வருகின்றன. அவர்கள் எல்லாம் 5 லட்சத்தை எட்டியிருந்தாலே அது மாபெரும் சாதனை.
ஆனால், வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு கடலை போடும் ஒரு நபரைக் கல்லூரிக்கு அழைப்பதுடன் கிட்டத்தட்ட 3 மில்லியன் நபர்கள் அவரை ஆதரிக்கிறார்கள் என்பது வேதனையா என சொல்லலாம்.
ஆனால், இன்று தரக்குறைவாகப் பேசுவோரையும், தரக்குறைவாக வீடியோ வெளியிடுபவர்கள் தான் மக்கள் செலிபிரிட்டியாக பார்க்கிறார்கள். குறிப்பாக இந்த 2கே கிட்ஸ்.,
ஒரு காலத்தில் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்ட விஜபி-கள் என்றால் யார் தெரியுமா..? அண்ணாதுரை பச்சையப்பன் கல்லூரிக்கு அழைத்துப் பேச வைத்தார்கள்.
பாரதிதாசனை அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அழைத்துப் பேச வைத்தார்கள். இப்படி வலம்புரி ஜான் தொடங்கி சுகி சிவம் வரை தமிழ்நாட்டில் கல்லூரிகளுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டனர்.
ஆனால் இந்த தலைமுறையில் ஆபாசமாக பேசுவது ஆயிரம் லைக்ஸ், ஆயிரம் கமெண்ட் இருந்தால் அவர் செலிபிரிட்டி என்றால்..? நாடு என்ன ஆவது..? இதற்காக உழைத்த தலைவர்களின் புகழ் என்ன ஆவது..?
“கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைக்கிறார்கள் என்றால், அவரைப் பற்றிய பின்புலம் என்ன என்பதை எல்லாம் விசாரிக்க வேண்டாமா..? இப்படி ஒருவரைக் கல்லூரிக்கு மாணவிகள் விரும்பி அழைக்கிறார்கள் என்றால் அவர்களின் ரசனையே மக்கி மண்ணாகப் போய்விட்டது.
மறைந்த நம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஐயா என்றால் நேசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.? குறிப்பாக 80ஸ் மற்றும் 90ஸ் களின் அவர் ஒரு வழிகாட்டி என சொல்லலாம். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் நீங்கள் கனவு காண வேண்டுமென ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஐயா சொல்லி இருப்பார். அவரின் வார்த்தைகள் பின் பற்றிய கடைசி தலைமுறை 80ஸ் மற்றும் 90ஸ் என சொல்லாம்.
ஆனால் தற்போதைய 2கே கிட்ஸ் இன்ஸ்ட்டா இம்சைகளுக்கு ரசிகர்கள் ஆகி.., அவர்களை போல ரீல் செய்து அதை நோக்கி பயணம் செய்கிறார்கள்..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..