இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் 17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது
இன்சாட் 3டிஎஸ் (INSAT-3DS) செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி (GSLV) எஃப்-14 ராக்கெட் 17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வுக்கான அதிநவீன இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 (GSLV-F14) ராக்கெட் மூலம் 17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதில் உள்ள 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள், புவியின் பருவநிலை மாறுபாடுகளை கண்காணித்து வானிலைத் தகவல்களை துல்லியமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.