பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதை முன்னிட்டு, ரயில், விமானம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா விவேகானந்தர் இல்லம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படை தளம் உள்ளிட்ட இடங்களிலும், சென்னையில் அவர் செல்லும் வழித் தடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மோப்ப நாய்களைக் கொண்டு தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் வருகைக்கு பாதுகாப்புப் பணிகளில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 22 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் நாளை சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்உத்தரவிட்டுள்ளார்.