சென்னை கன்னிகாபுரத்தில் 2சிறுமி 1இளம்பெண் 11 பேரால் பாலியல் வன்கொடுமை..!!
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மாதவன் மற்றும் அருணா இந்த தம்பதிகளுக்கு பிரியா (பெயர் மாற்றம்) 17 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
இவர்களின் வீட்டிற்கு தாம்பரத்தை சேர்ந்த சரண்யா (பெயர் மாற்றம்) 18 வயது உறவுக்கார பெண் வீட்டிற்கு வருவது வழக்கம்..,சரண்யா தனது 17 வயது தோழி பூஜாவை அழைத்துக் கொண்டு கன்னிகாபுரத்தில் உள்ள சித்தி வீட்டிற்கு ஜூன் 28ம் தேதி சென்றுள்ளார்.
பிரியா, சரண்யா, பூஜா மூவரும் அடிக்கடி வெளியே செல்வது வழக்கம்.., அதே போல் ஜூன் 29ம் தேதி இரண்டு நாட்கள் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு வருகிறோம் என்று வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.
30ம் தேதி இரவு பிரியாவும், பூஜாவும் கன்னிகாபுரம் வீட்டிற்கு வந்துவிட சரண்யா நீண்ட நேரம் கழித்து நடக்க முடியாமல் வந்துள்ளார். இது குறித்து அருணா (சித்தி) கேட்ட பொழுது, தன்னை 5பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும்.., உடல் முழுவதும் வலி என்றும் கூறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாதவன் மற்றும் அருணா காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் அங்கு வந்த புளியந்தோப்பு போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், நடந்த சம்பவம் பற்றி விசாரித்து விட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சிகிச்சைக்கு பின் காவல் துறையினர் மீண்டும் சரண்யாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையிலே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சித்தி மகள் பிரியாவிற்கும், சில தவறான ஆண் நண்பர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரியா, இந்த ஆண் நண்பர்களுக்கு சரண்யா மற்றும் பூஜாவை, அறிமுக படுத்தியுள்ளார்.
பின் இவர்கள் அனைவரும் அடிக்கடி வெளியே சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் சென்ற பொழுது, கன்னிகாபுரம், வெங்கடேசபுரம் பழைய காலனி பகுதியை சேர்ந்த 3 ஆண் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளனர்.
அப்பொழுது அந்த பெண்களுக்கு மது வாங்கி கொடுத்து, 2 நாட்களும் தனிமையில் இருந்துள்ளனர். 2 நாட்களுக்கு பிறகு பூஜா மற்றும் பிரியா மட்டும் தப்பித்து விட சரண்யா இவர்களிடம் சிக்கி கொண்டுள்ளார்.
அந்த 3 பேரும் போன் செய்து மற்ற ஆண் நண்பர்களை வரவழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருகின்றனர். செய்து விட்டு அவர்களை சரண்யாவை கன்னிகாபுரத்தில் கொண்டு வந்தும் விட்டுள்ளனர்.
சரண்யா கொடுத்த புகாரின் பெயரில், கன்னிகாபுரம் தாஸ்நகர் முதல் தெருவை சேர்ந்த பாஸ்கர் (22), தனுஷ் (19), சஞ்சய் (21), லாமிக் (18), மகேஸ்வரன் (18), அன்னை தனுஷ் (19), முத்துராமன் (21), சஞ்சை (18), மற்றும் 17 வயது சிறுவர்களை புளியந்தோப்பு ரோந்து பணி போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் கார்த்திக் விஷால் என்ற 22 வயது என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் புழல் சிறையில் அடைத்துள்ளனர். 17 வயது சிறுவர்கள் மூன்று பேரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.
ஒரு சிறுமியின் தவறான இந்த பழக்கம் இன்று ஒரு இளம் பெண்ணையும், இரண்டு சிறுமிகளையும் பாதிக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
Discussion about this post