Monday, May 19, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

196 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகள் மீட்பு..!! புதைக்கப்பட்ட  மர்மம்..!!

சுவாமியின் பெயர் அல்லது சைவ, வைணவக் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆதியூரில் உள்ள செக்கில் அவ்வகையான எந்தக் குறிப்புகளும் இல்லை என்பதால், இச்செக்கு மக்கள் பயன்பாட்டிற்கோ அல்லது சிறுதெய்வ கோயிலுக்கோ வழங்கப்பட்டிருக்கலாம். கல்வெட்டில் பிழைகளோடு எழுதப்பட்டுள்ளது.

by logeshwari
August 27, 2024

196 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகள் மீட்பு..!! புதைக்கப்பட்ட  மர்மம்..!!

 

 

 

திருப்பத்தூர் அருகே வரலாற்று சிறப்புமிக்க 19ஆம் நூற்றாண்டின் செக்குக்கல்வெட்டு கண்டெடுப்பு

 திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பிரபு மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில்  திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியைச் சேர்ந்த முனிசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில்  19ஆம் நூற்றாண்டின் அதாவது 196 வருடங்களுக்கு முந்தைய செக்கு கல்வேட்டு  கண்டுபிடிக்கப்பட்டன.

இது குறித்து முனைவர் பிரபு  கொடுத்த பிரத்யேகமாக அளித்த தகவலின் படி ஆதியூர் பகுதியில் எங்கள் ஆய்வுக்குழுவினர் நடத்திய கள ஆய்வில் ஆதியூரின் தென்புற எல்லையில் ‘ஆலமரத்து வட்டம்’ என்ற இடத்தில் தனியார் விவசாய நிலத்தின் வரப்பில் 4 ½ X 3 ½ அடி சுற்றளவு கொண்ட  பாறையினைப்  பெயர்த்தெடுத்து, அதன் சமதளமான மேற்புறத்தைச் செம்மைப்படுத்தி மையத்தில் 1அடி ஆழத்தில் குழியினை ஏற்படுத்தி அதனைச் சுற்றி சதுரவடிவில் அழகுபடுத்திச் செக்கினை உருவாக்கியுள்ளனர்.

பழங்காலத்தில் மின்சாரம் இல்லாததால் விளக்குகள் எரிப்பதற்கும், சமையலுக்கும் எண்ணெயின் தேவை மிக, மிக முக்கியமானதாக இருந்துள்ளது. மக்கள் நிலக்கடலை, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களை இந்த உரலில் ஆட்டி எண்ணெய் எடுத்துப் பயன்படுத்தினர். எண்ணெய் எடுப்பதற்கு கல்லால் ஆகிய சிறு உரல் போன்ற கல்செக்குகள் பயன் படுத்தப்பட்டுள்ளன.

இவை, கோயில் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென செய்து தானமாகத் கொடுக்கப்பட்டதை குறிக்கிறது செக்கில் எண்ணை ஆட்டுபவர்கள் செக்குக்குக் கூலியாக ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெயை கோயிலுக்கோ அல்லது அரசுக்கோ செலுத்துவார்கள்.குறுநில தலைவர்களாக,  ஊர் முக்கியஸ்தர்களாக  இருக்கும்  சிலர் இது போன்ற கல்செக்கை உருவாக்கி தானமாக கொடுத்துள்ளனர்.

உடன்  பிறந்தவர்கள்,  உறவினர்கள், நலம் பெறவும் வேண்டுதலின் பேரில் இத்தகைய செக்குகள் தானமாக தரப்பட்டுள்ளன. இப்படித் தானமாக தரும்போது அதைச் செய்து கொடுப்பவர் தன் ஊர், தந்தை பெயருடன் தன் பெயரையும் கல்வெட்டாக அந்தக் கல்செக்கில் பொறித்து தரும் வழக்கமும் இருந்துள்ளது. ஒரு அடி ஆழத்தில் உட்புறம் பானை போன்ற குழியுடன் எண்ணெய் ஆட்டுவதற்கான அமைப்புடன் இந்த செக்குக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.  இந்தச்  செக்கில்  3 வரிகளுடன்  கூடிய எழுத்துகள் பதிக்கப்பட்டுள்ளன.

அதாவது, ‘‘சோமசுந்தி(த)ர முதலியாரு சர்வதாறி(ரி) வருஷம்” என அதில் எழுதப்பட்டுள்ளது. இதன் விளக்கம்:இப்பகுதியைச் சேர்ந்த ‘சோமசுந்தர முதலியார்’ என்பவர் சர்வதாரி ஆண்டில் இச்செக்கினை ஏற்படுத்தி வழங்கியுள்ளார் என கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. பொதுவாக இந்த வகையான செக்குகள் அக்காலத்தில் கோயிலுக்கு விளக்கேற்றுவதற்கான எண்ணை தயாரிக்க ஏற்படுத்தித் தரப்படும்.

அதற்குச்  சான்றாகக் கோவில் பெயர், சுவாமியின் பெயர் அல்லது சைவ, வைணவக் குறியீடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆதியூரில் உள்ள செக்கில் அவ்வகையான எந்தக் குறிப்புகளும் இல்லை என்பதால், இச்செக்கு மக்கள் பயன்பாட்டிற்கோ அல்லது சிறுதெய்வ கோயிலுக்கோ வழங்கப்பட்டிருக்கலாம். கல்வெட்டில் பிழைகளோடு எழுதப்பட்டுள்ளது.

அதாவது  சோமசுந்தர முதலியார் என்பதை சோமசுந்திர முதலியார் என்றும், சர்வதாரி என்பதை சர்வதாறி என்றும் எழுதியுள்ளனர். சர்வதாரி ஆண்டினைக் குறிப்பிடுவதாலும் எழுத்துக்களின் அமைப்பினை வைத்துப் பார்க்கும் பொது இச்செக்குகல் வெட்டானது. 196 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டதாகும். அந்த கால மக்கள் விளக்கெரிக்கவும் இதரப் பயன்பாட்டிற்காவும் முன் வந்து வழங்கப்பட்ட இந்த வரலாற்று ஆவணம் திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்”. மேலும் வரலாற்று தடயங்களை மீட்டு ஆவணப்படுத்த வேண்டும் எனவும்   அவர் கூறினார்..

Tags: #Madhimugam#Madhimugam NewsRecovery of Ancient Inscriptionsகல்வெட்டுகள் மீட்புசெக்கு கல்வெட்டுதிருப்பத்தூர் மாவட்டம்
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

TN Govt employees to get 4 month DA
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Next Post
MADHIMUGAM

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்..! முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Jyoti Malhotra kept in touch with Pak agents

போரின் போது பாக்., அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

Trending News

Jyoti Malhotra kept in touch with Pak agents

போரின் போது பாக்., அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.