காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமம், பஜனை கோயில் தெருவை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரின் இரண்டாவது மகள் தனிஷியா தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு, படித்து வந்தார். மாணவி தனிஷியா அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்ற நிலையில், ஆங்கிலப்பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி மாலை வீட்டுக்கு வந்த பின், படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காஞ்சிபுரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மாணவி அறையில் சோதனை செய்த காவல்துறையினர், மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் ஆங்கிலம் சரியாக பேச, எழுத வராததால் வகுப்பறையில் சகமாணவிகளின் முன்னிலையில் ஆசிரியர் திட்டியதாகவும், இதனால் ஐ ஆம் நோ ஹேப்பி என எழுதி வைத்து விட்டு தற்சொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவி தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.