1.10 கோடி மானநஷ்ட ஈடு..!! கோர்ட்டில் ஆஜரான எடப்பாடி…!!
கடந்த 2016-2021 ஆட்சிகாலத்தில் நெடுஞ்சாலை துறையில் ஊழல் உட்பட பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், அப்போதைய முதலமைச்சராகவும் அந்த துறையின் அமைச்சராகவும் எடப்பாடி பழனிசாமிக்கும் அதில் தொடர்பு இருப்பதாக கூறி அறப்போர் இயக்கம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசியுள்ளனர்..
அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் அவரது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, தன்னைப் பற்றிய அவதூறு பேச்சுக்கு தடை விதிக்க கோரியும், 1.10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அந்த வழக்கு மீதான விசாரணை இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது., அந்த நேரில் ஆஜரான எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொண்டு சாட்சியங்களை வைத்து வழக்கை அடுத்த மாதம் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..