நெல்லை வழியே செல்லும் ரயில்கள் ரத்து..!! திருநெல்வேலி மக்கள் கவனத்திற்கு..!!
திருநெல்வேலியில் உள்ள ரயில்வே யார்டு பகுதியில் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மதுரை தெற்கு ரயில்வே கோட்டம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் ரயில் எண் 06675 திருநெல்வேலி டூ திருச்செந்தூர் இடையேயான முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே சமையம் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு இன்று மாலை 4:15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 06409 எண் கொண்ட முன் பதிவில்லா சிறப்பு ரயில் மாலை 6மணிக்கு புறப்படும் .
சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வழியே செல்லும் அந்தியோதையா சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படாமல் விருது நகரில் இருந்து புறப்படும். மேலும் திருச்செந்தூர் செல்லும் ரயில் கோவில்பட்டி வரை மட்டுமே செல்லும்.
முன் அறிவிப்பின்றி ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது பயணிகளிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. என வேதனை தெரிவித்துள்ளனர்.