கார் ஷெட்டில் பதுங்கிய சிறுத்தையை பிடித்த வனத்துறையினர்க்கு..! குவியும் பாராட்டு..!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புற நுழைவு வாயிலையொட்டி தனியாருக்குச் சொந்தமான பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் ஒரு பகுதியில் வர்ணம் பூசும் பணிகளும் நடந்து வருகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் வர்ணம் பூசம் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பள்ளி வளாகத்துக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்ததுள்ளது. அதனை கண்ட பள்ளி மைதானத்தில் இருந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயத்தில் சத்தம் போட்டு ஓடினார்.
இந்த சத்தத்தை கேட்டதும் சிறுத்தை அங்கிருந்து பாய்ந்து ஓடியப்போது வர்ணம் பூசும்பணியில் இருந்த திருப்பத்தூர் அடுத்த புத்தகரம் பகுதியைச் சேர்ந்த கோபால் (52) என்பவரை சிறுத்தை தாக்கியது.
இதில், அவரது இடதுப்புறம் தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
உடனே பள்ளி நுழைவு வாயில் கதவு மூடப்பட்டதை தொடர்ந்து பள்ளியை ஒட்டியுள்ள சுற்றுச்சுவரை தாண்டி அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை நுழைந்தது. அங்கு சென்ற சிறுத்தை மனிதர்களின் சத்தத்தை கேட்டதும் அங்குள்ள ஒரு வீட்டில் நுழைந்து அங்கேயே தஞ்சமடைந்தது.
வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் 3 பிரிவுகளாக பிரிந்து சிறுத்தையை பிடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் திருப்பத்தூரில் சிறுத்தை நுழைந்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தை பிடிப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தி சிறுத்தை செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர்.
அங்கு இருந்த கார் ஷெட்டில் சிறுத்தை இருந்த நிலையில் 2 கார்களில் இருந்த 5 பேர் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் வீடியோ அழைப்பு சிறுத்தையின் நிலையை கேட்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து மண்டல வன பாதுகாவலர், மற்றும் கால்நடை மருத்துவர் கொண்ட குழுவினர் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி சுமார் 11 மணி நேர போரடடத்திற்கு பின் சிறுத்தை பிடிக்கப்பட்டது.
மேலும் துரிதமாக செயல்பட்டு சிறுத்தையை பிடித்த மண்டல வன பாதுகாவலர், மற்றும் கால்நடை மருத்துவர் கொண்ட குழுவினர்க்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது.
-பவானிகார்த்திக்