சிங்கப்பூரிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்த கார் மீது ஆயில் டேங்கர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே மூவர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் சென்னை வழியாக திருப்பதிக்கு வந்தனர். ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் மீண்டும் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
பக்தர்கள் சென்ற கார் நகரி பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மபுரம் கிராஸில் சென்றபோது கார் மீது ஆயில் டேங்கர் லாரி மோதியது. இதில் காரில் பயணம் செய்ய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதனையடுத்து டேங்கர் லாரி டிரைவரை கைது செய்து நகரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.