“ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள்” கோவிலில் தெப்பத் தேர் திருவிழா
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவைப் பகுதியில் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் மாசி மகம் தெப்ப தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஆயிரம்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த தெப்பத் தேர் திருவிழா காலம் காலமாக ஊரின் வளர்ச்சிக்காகவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் இந்த தேர் திருவிழா நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.