இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அந்த அப்டேட்..?
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 2024 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அல்லது நாளை அறிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அரசியல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் தொடங்கிவிடும். மக்களவைத் தேர்தலை ஒட்டி இப்போதே தேசியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கிவிட்டன.
பா.ஜ.க. இதுவரை இரண்டு கட்டங்களாக 267 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் 82 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மாநிலக் கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பை தீவிரப் படுத்தியுள்ளன. மேற்குவங்கத்தில் மம்தா 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார்.