வளர்ப்பு நாய் தானே.. கடித்தது என்ற அலட்ச்சியதால் இறுதியில் நடந்த சோகம்..!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை பகுதியை சேர்ந்தவர் முத்தையா (50). இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.
இவர், சில வருடங்களுக்கு முன்பு தனது வீட்டில் குட்டி நாய் ஒன்றை வந்துள்ளார். இந்தநிலையில், சில மாதங்களுக்கு முன்பு வெளியில் சென்ற இந்த நாயை தெருவில் உள்ள வெறிநாய் கடித்ததால் இவரது நாய்க்கும் வெறி பிடித்திருக்கிறது.
இதனால் முத்தையா நாயை சங்கிலியில் கட்டிப் போட்டு வைத்திருந்திருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த வாரம் முத்தையா வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, சங்கிலியை அறுத்து கொண்டு வந்த நாய் அவர் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது.
இதையடுத்து, நாய் கடித்தால் உடனடியாக ஊசி போடாமல் அலட்சியமாக இருந்துள்ளார். பின்னர், இரு நாட்கள் கழித்து அவருக்கு குமட்டலும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதையும் அவர்கள் பொருட்படுத்தாமல் ஒவ்வாமை என்று நினைத்துள்ளனர்.
இதையடுத்து அடுத்த நாளே அவர் தண்ணீரை பார்த்து பயந்து, நாய் போல குரைக்கவும் ஆரம்பித்தார். பின்னர், அவரை பார்த்து பயந்துபோன அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் பிரேத பரிசோதனை செய்யபட்ட அறிக்கையில் நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்