உயர்ந்தது தங்கத்தின் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!!
ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக குறைந்து கொண்டே வந்தது. மக்களுக்கும் மகிழ்ச்சியில் இருந்தார்கள் ஆனால் இன்று அதிர்ச்சி தரும் விதமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
22காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை 44,336 ஆகவும். கிராம் ஒன்றுக்கு 37 ரூபாய் உயர்ந்து 5,542 ரூபாய் ஆகவும் விற்கப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 248 உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை 36,320 ரூபாய் ஆகவும், கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து 4,540 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்ந்து 78.50 காசுக்கும் கிலோ ஒன்றுக்கு 78,500 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று குறைந்து விற்கப்பட்ட தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிகரித்து இருப்பது நகை பிரியர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.