இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்களுக்கு நேர்ந்த கொடூரம்..!! கத்தி முனையில் நடந்த சம்பவம்..
நாகை மாவட்டம் வேதாராண்யம் அருகே கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 6 பேர் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.., மேலும் கத்தியை காட்டி மிரட்டி ஜிபிஎஸ் கருவி.., செல்போன் உட்பட அனைத்தும் பரிதுள்ளனர்…
நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேதாராண்யம் அருகே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாராண்யத்தை சேர்ந்த நெடுஞ்செழியன், ராமகிருஷ்ணன், மதியழகன், குமரவேல் ஆகியோர் படகில் சென்றுள்ளனர்..
கோடியக்கரை அருகே தென்கிழக்கு எட்டு நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.., அப்போது திடிரென அடையாளம் தெரியாத நான்கு மீனவர்கள் வந்து படகை வழிமறித்து தமிழக மீனவர்களை தாக்கி.., கத்தியை காட்டி மிரட்டி அனைத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்..
சில நாட்களுக்கு முன்பும் இதைபோல் பதினைந்து மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.. இதுகுறித்து தமிழக மீனவர்கள் அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்..
தமிழக கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதுடன்.., மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து செல்கின்றனர்.., இதை கண்டித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசிடம்.., மீனவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்..