தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502ஆக உயர்ந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இந்த எண்ணிக்கை 493ஆக இருந்த நிலையில் இன்று 500ஐ கடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் இன்று திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்திருக்கிறார்.
ஏற்கனவே தொற்று எண்ணிக்கை 500ஐ கடந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.