வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ அபிஷேக விழா..
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு தேன், பால், தயிர், சந்தனம், கரும்பு சாறு ஆகியவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.