ADVERTISEMENT
விஜய்யை பின்பற்றும் சிவகார்த்திகேயன்..!!!
சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்துவருகிறார்.முருகதாஸ் படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
இதற்கிடையே விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கப்போகிறார். தொடர்ந்து அவர் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று ஒருதரப்பினர் கூறிகின்றனர்.
தொடர்ந்து இந்நிலையில் தனக்கான கதையில் பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் இருக்க வேண்டுமென அவர் கண்டிஷன் போட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைவைத்து சிவகார்த்திகேயன் அப்படியே விஜய் ஃபார்முலாவை பின்பற்றுகிறாரோ என்பது போலத் தெரிகிறது.
சென்னை போரூரில் சிவகார்த்திகேயன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அதை பார்த்த பல ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு அசைவும் விஜய் அமர்ந்திருந்த நாற்காலியை நோக்கியதாகவே இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.