பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் .
- உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் 2996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 175 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்
- மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேலும் ஊக்கப்படுத்த மாபெரும் வாசிப்பு இயக்கம் 10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
- வரும் கல்வி ஆண்டில் இரண்டாவது கட்டமாக 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்
- அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ஒரு மாதிரி பள்ளி என்ற அடிப்படையில் இந்த ஆண்டு 13 மாவட்டங்களுக்கு மாதிரி பள்ளிகள் உருவாக்க 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
- பிற மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களின் தாய் மொழியுடன் தங்கு தடையின்றி தமிழ் பேசவும் எழுதவும் ஏதுவாக தமிழ் மொழி கற்பம் என்ற திட்டம் தொடங்கப்படும்
- அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள் சுமார் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்
- 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கெட்டில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்
- 15 கோடி ரூபாய் நிதி உதவிக்கெட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்படும்
- அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுத்திட 8 கோடி மதிப்பீட்டில் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படும்
- 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என குறைந்தபட்சம் ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் வழங்கப்படும்
- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பணியில் சேர்வதற்கு முன்னர் 15 நாள் கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை நிர்வாகப் பயிற்சிகள் வழங்கப்படும்
- அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மேம்படுத்த ஆய்வகங்கள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்
- வரலாறு வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக மூன்றாம் பாடப்பிரிவு உருவாக்கப்படும்
- புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது 11 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- சிறைச்சாலைகளில் உள்ள முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 1249 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்படும்
- பாரம்பர்யம் மிக்க தேசிய நூலகமான கன்னிமாரா பொது நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்கள், குழந்தைகள், சொந்த நூல்கள் படிக்கும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் 5 கோடி மதிப்பீட்டில் சிறப்பு பிரிவுகள் தொடங்கப்படும்
- இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் தற்போது நடத்தப்படும் ஐந்து இலக்கிய திருவிழாக்களுடன் இணைந்து இளைஞர் இலக்கிய திருவிழா 30 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்படும்
- அனைத்து மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழு நேர கிளை நூலகங்கள் படிப்படியாக ஆண்டுதோறும் 15 கோடி மதிப்பீட்டில் வாசகர்கள் வசதிக்கேற்ப புதுப்பிக்கப்படும். முதற்கட்டமாக 20 மாவட்ட மைய நூலகங்களும் 30 முழு நேர கிளை நூலகங்களும் மறு சீரமைக்கப்படும்.
















