1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்லை என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு சூழல் ஏற்படவில்லை. இருப்பினும் காய்ச்சல் தொடர்பாக மருத்துவத்துறை ஆலோசனையின்படி செயல்படுவோம்.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து ஆலோசிக்க உள்ளோம். பொதுத்தேர்வுக்கு பயந்து வராமல் இருக்கிறார்களா அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம். தேர்வுக்கு பயந்து வராமல் இருக்கிறார்களா அல்லது வேறு என் காரணம் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி இடை நிற்றல் அதிகமாக உள்ளது. 2019 ஆண்டில் பொதுத்தேர்வில் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. மாணவர்களின் மனநிலையை ஆய்வு செய்ய வேண்டும்.
1 முதல் 9ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டமில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டி தேர்வுகள் நடக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.