எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன் கேரக்டரில் எஸ்.ஏ.சந்திர சேகர்..! இது நம்ப லிஸ்ட்லையே இல்லையே..!!
சின்னத்திரையில் டி.ஆர்.பி-யில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் முதல் இடம் பிடித்து இருக்கும் சீரியல் “எதிர்நீச்சல்“. திருமதி செல்வம் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல்.
வெகு விரைவாக மக்களின் மனதில் இடம் பிடித்தது. அப்படி முதல் இடம் பிடித்தற்கு என்ன காரணம் விறுவிறுப்பான கதைகளமும் அதில் வரும் கதாபாத்திரங்களும் தான்.
அதிலும் ஆதி குணசேகரன் “ஏம்மா ஏ” என்று அவர் சொல்லும் வசனம் பலரையும் கவர்ந்தது.., இவர் சொல்லும் இந்த “ஏம்மா ஏ” என்ற டயலாக் வைத்து மீம்ஸ் போடாதவர்கள் மற்றும் ட்ரோல் செய்யும் நெட்டிஸைன்கள் ஏராளம். அவருக்கு கவுண்டர் கொடுக்கும் நந்தினி கதாபாத்திரம் இன்னும் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும்.
நந்தினி குணசேகரன் மீம்ஸ்.., என்று நிறைய ஹாஸ் டாக் களும் உண்டு.., சிறந்த கதைக்களம், இயல்பான நடிப்பு இதனால் என்னவோ பலர் மனதிலும் இடம் பிடித்து இன்று வாரத்தில் ஏழு நாட்களும் ஒளிபரப்பாகும் என “சன் டிவி” நெட் ஒர்க் நிறுவனம் அறிவித்திருக்கிறது. வாரத்தில் ஏழு நாட்களும் மக்களால் கேட்டு ஒளிபரப்ப செய்த தொடர் என்ற பெருமை இந்த எதிர்நீச்சல் தொடரையே சேரும்.
“ஏம்மா ஏ” என்று சொல்லி மக்கள் மனதில் இடம் பிடித்த ஆதிகுணசேகரன் எனும் மாரிமுத்துவிற்கு பிற தொடர்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர். எதிர்நீச்சல் குணம்சேகரன் என்ற கதாபாத்திரம் இவரின் வாழ்க்கையை மாற்றியதால், சில பிரமாண்ட தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை நிராகரித்துள்ளார்.
அவர் நிராகரித்தது என் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். நடிகை ராதிகா தயாரிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் தான்.., “கிழக்கு வாசல்” இந்த சீரியல் மூலம் நடிகர் விஜயின் தந்தை சின்னத்திரையில் கால் பதிக்கிறார். அதில் ஆச்சரியம் என்ன வென்றால்.., எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் தான் ஆதிகுணசேகரன் நடிக்க வைக்க, நடிகை ராதிகா திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அதற்கு ஆதிகுணசேகரன் எனும் மாரிமுத்து இந்த தொடரில் நடிக்க கோரி நடிகை ராதிகா கேட்ட பொழுது.., தற்போது நான் எதிர்நீச்சல் விட்டு வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் .., அதனால் என்னை மன்னித்து விடுங்கள். என கூறியிருக்கிறார்.
ஒரு வேளை மாரிமுத்து, எதிர்நீச்சல் தொடரில் இருந்து கிழக்கு வாசல் தொடரில் நடித்து இருந்தால் ஒரு பாசமான அப்பாவையும் நாங்கள் பார்த்து இருப்போம் என ரசிகர்கள் அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.